Friday 10th of May 2024 05:46:01 AM GMT

LANGUAGE - TAMIL
-
மன்னார் சிவனருள் இல்லச் சிறுமிகள் உட்பட 40 பேருக்கு கொரோனா!

மன்னார் சிவனருள் இல்லச் சிறுமிகள் உட்பட 40 பேருக்கு கொரோனா!


மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயச் சூழலில் செயற்படும் சிவனருள் இல்லத்தில் சிறுமிகள் உட்பட 29 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மன்னார் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த சிறுவர் இல்லத்தில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை,

மன்னார் சிறுநாவற்குளம் பகுதியில் செயற்படும் ஸ்ரீ ருத்திரம் உணவகத்தில் பணியாற்றும் 11 பேருக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த உணவகம் சிவனருள் சிறுவர் இல்ல நிர்வாகத்தினரின் ஆளுகையின் கீழ் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், மன்னார்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE